JCM கூட்டாலோசனைக்குழு பயிற்சிப்பட்டறை
தோழர்களே..
வேலூரில் 22/02/2014 அன்று JCM உறுப்பினர்களுக்கான
பயிற்சிப்பட்டறை உற்சாகமுடன் நடைபெற்றது.
தோழர். லட்சம் தலைமையேற்று நடத்தினார்.
தோழர்கள்.ஆர்.கே.,
முத்தியாலு, தமிழ்மணி, ஆகியோர் தங்களது கடந்த கால JCM அனுபவங்களையும்
வருங்காலத்தில் நாம் செல்ல வேண்டிய வழிகள் பற்றியும் சிறப்புடன்
எடுத்துரைத்தனர்.
மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.சேது,
அகில இந்திய அமைப்புச்செயலர் தோழர்.கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் கருத்துரை வழங்கினர்.
வேலூர் பொதுமேலாளர் நிர்வாகத்திற்கே உரிய வியாபார மொழியில் தனது வாழ்த்துரையை வழங்கினார்.
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி
JCMன் வரலாறு பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் இன்றுள்ள சூழலில்
ஒற்றுமையுடன் ஊழியர் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும்
விரிவாக எடுத்துரைத்தார்.
ஜார்க்கண்ட் மாநிலச்செயலர். தோழர்.மகாவீர்சிங் அவர்களின் காரசாரமான உரை பட்டறையின் சிறப்பம்சங்களாக அமைந்தது.
No comments:
Post a Comment