Thursday, May 15, 2014

நமது குடந்தை மாவட்டத்தில் 
தோழர் .V .ஜெயராமன் TOA  AO PLG section GM(o )KMB  
தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் .
தேர்ச்சி பெற்ற தோழர்க்கு காரை கிளை சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

30-03-2014 அன்று நடைபெற்ற Sr.TOA பதவி உயர்வுக்கான
 தகுதி தேர்வின் (SCREENING TEST) தேர்வு முடிவுகள் 
இன்று (13-05-2014) வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகம் முழுக்க 42 தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
தூத்துக்குடி தோழர்.P.சரவணகுமார் TOA (TG) அவர்களின்   தேர்வு முடிவு தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி, பாண்டிச்சேரி மற்றும் நாகர்கோவில்
 மாவட்டங்களில் இருந்து யாரும் தேர்வெழுதவில்லை.

தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்
சேலம்
G.ஹம்சவேணி 
K.சாந்தி
V.மஞ்சுளா
K.பாலசுப்ரமணியன்


கோவை
P.ரவிச்சந்திரா
N.முத்துநகை
R.துரை
K.சரோஜினி

குன்னூர்
R.ரமேஷ் குமார்
A.பிரான்சிஸ் சுரேஷ்

கடலூர்
D.சரவணக்குமார்
B.சரோஜா
M.செல்வக்குமார்

தருமபுரி
S.K.அலோசியஸ் அமுல்ராஜ்
ஜைபுன்னிசா
S.ராஜா

ஈரோடு
K.விஜயகுமார்
S.உமா
K.பரமேஸ்வரி
S.பாலு
A.கவிதா
R.கலா

குடந்தை - V.ஜெயராமன்

மதுரை
S.முத்துலட்சுமி
A.முத்துமாரி
G.ராஜ்குமார்
A.தியாகு

தஞ்சாவூர் - S.வத்சலா

திருச்சி
R.மணிமாறன் 
C.மணிமேகலை 
K.மாலதி 
T.விஜயலட்சுமி 
K.சுரேஷ்பாபு 
D.மணி 

நெல்லை - D.பிரபு 

வேலூர் 
A.ஜஸ்டின் 
C.K.பன்னீர்செல்வம் 
R.பிரியா 
V.V.சத்யநாராயணன் 
S.சேது நாராயணமூர்த்தி 
K.சிவராஜ் 

விருதுநகர் - R.பிரேம்குமார்



தற்காலிகத் தேர்வு - PROVISIONAL SELECTION
தூத்துக்குடி- P.சரவணக்குமார்.


தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு...
 நமது மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்...

Monday, April 28, 2014

NATIONAL JCM 
தேசியக்குழு கூட்ட  முடிவுகள் 

23/04/2014ல் டெல்லியில்  நடந்த NJCM தேசியக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு 
முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

  • JTO/JAO தேர்வு எழுதி தேர்ச்சியுறாதவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் பாடத்திட்டத்தில் இடம் பெறாத கேள்விகள், தவறான கேள்விகள் கேட்கப்பட்டது  பற்றி பரிசீலிக்கப்படும்.
  • புதிய JTO ஆளெடுப்பு விதி ஒப்புதல் பெறப்பட்டபின் JTOவாக OFFICIATING செய்யும் 1500 TTAக்களும் நிரந்தரம் செய்யப்படுவர். 
  • JTO/JAO தேர்வு எழுதுவதற்கான சேவைக்காலம் 7 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்படும்.
  • SC/ST தோழர்களுக்கு நிரப்பப்படாத காலியிடங்கள் BACKLOG VACANCY ஏதும் இல்லை.இது பற்றி DOTக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வழக்கு நிலுவையில் உள்ளதால் கருணை அடிப்படையில் TSM ஆகப்பணிபுரியும் தோழர்களின் பணி நிரந்தரம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் குறிப்பிட்ட சில தோழர்களது நிரந்தரம் பரிசீலிக்கப்படும்.
  • பயிற்சிக் காலத்திற்கான உதவித்தொகை STIPEND புதிய சம்பள விகிதத்தில் 01/01/2007ல் இருந்து வழங்கப்படும்.
  • புதிய ஆளெடுப்பு பற்றி ஆய்வு செய்யப்படும். தொழிற்சங்கங்கள் மற்றும் ஆலோசனைக்காரர்களின் CONSULTANT உதவி ஏற்கப்படும்.
  • 01/10/2000க்குப்பின் வரக்கூடிய பதவி உயர்வு தேதியில் இருந்து சம்பளப்பொருத்தம் 2000 WAGE REVISION அளிப்பது பற்றி முடிவெடுக்கப்படும்.
  • அனைவருக்கும் இலவச SIM வழங்குவது சாதகமாக முடிவெடுக்கப்படும். பிற நிறுவனங்களை அழைப்பதற்கு OFF NET CALLS  மாதம் 50 வரை சலுகை அளிக்கப்படலாம்.
  • ஒழுங்கு நடவடிக்கைகளை விரைந்து முடிக்க மாநில நிர்வாகங்களுக்கு வலியுறுத்தப்படும்.
  • TSM தோழர்களுக்கான BSNL ஏற்பு உத்திரவு DOTக்கு அனுப்பபட்டுள்ளது.

Tuesday, February 25, 2014

JCM கூட்டாலோசனைக்குழு பயிற்சிப்பட்டறை 

தோழர்களே..
வேலூரில் 22/02/2014 அன்று JCM  உறுப்பினர்களுக்கான 
பயிற்சிப்பட்டறை உற்சாகமுடன் நடைபெற்றது. 
தோழர். லட்சம் தலைமையேற்று நடத்தினார்.
தோழர்கள்.ஆர்.கே., முத்தியாலு, தமிழ்மணி, ஆகியோர் தங்களது கடந்த கால JCM அனுபவங்களையும் வருங்காலத்தில் நாம் செல்ல வேண்டிய வழிகள் பற்றியும் சிறப்புடன் எடுத்துரைத்தனர். 
மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.சேது, 
அகில இந்திய அமைப்புச்செயலர் தோழர்.கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் கருத்துரை வழங்கினர். 
வேலூர் பொதுமேலாளர் நிர்வாகத்திற்கே உரிய வியாபார மொழியில் தனது வாழ்த்துரையை வழங்கினார். 
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி JCMன் வரலாறு பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் இன்றுள்ள சூழலில் ஒற்றுமையுடன் ஊழியர் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
ஜார்க்கண்ட் மாநிலச்செயலர். தோழர்.மகாவீர்சிங் அவர்களின் காரசாரமான உரை பட்டறையின் சிறப்பம்சங்களாக அமைந்தது.
 

Saturday, February 22, 2014

பிப்ரவரி 22: தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை நினைவு தினம் இன்று..

தென்ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக காந்தியடிகள் நடத்திய சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று 16 வயதிலேயே உயிர் நீத்த தில்லையாடி வள்ளியம்மையின் நினைவு தினம் இன்று..

Monday, February 17, 2014

கடலுக்கடியில் பூம்புகார்…
பெங்களூர் மிதிக் சொசைடியில் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.
பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.

வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”

இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுகள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா?

உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்குமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் ஏற்றப்பட்டிருக்க வேண்டாமா? காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக்கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை.

தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா? பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா? சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை? நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா?

அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை? கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும். குமரிக்கண்டம்‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது.

இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”

1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்

2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு

3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறும் மலட்டாறு

4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்

5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள். இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தெளிவாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். ( தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர் )

1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.

2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.

3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.

4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.

5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை.

தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை.

ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்?
பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது.

இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா? வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா?

# இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?

# புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute Of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
நன்றி : தமிழ் -கருத்துக்களம்-

Friday, February 14, 2014

JCM மாநில, தலமட்டக்குழு உருவாக்கம் 
சில இடங்களில் NFTE  மற்றும் BSNLEU சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் தலமட்டக்குழு அமைப்பதில் தாமதம் உருவானது. ஏதேனும் ஒரு சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் இருந்தால் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தலமட்டக்குழுவை அமைத்துக்கொள்ளலாம் என BSNL நிர்வாகம் 13/02/2014 அன்று உத்திரவிட்டுள்ளது.  
உத்திரவு காண இங்கே சொடுக்கவும்

பாலு மகேந்திரா... 

ஒரு சகாப்தத்தின் மரணம்!

புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா இன்று வியாழக்கிழமை சென்னையில் காலமானார்.
அவருக்கு வயது 74.

கடந்த சிறிது காலமாகவே உடல் நலம் குன்றியிருந்த பாலு மகேந்திரா, இன்று காலை சென்னையின் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, காலமானார்.

இலங்கையின் மட்டக்களப்பில் பிறந்த பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரா, லண்டனில் படித்து, இந்தியாவின் பூனாவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலை பயின்றவர்.

படங்கள், விருதுகள்

1970களில் வெளியான மலையாளப் படமான " நெல்லு"வில் முதன் முதலில் ஒளிப்பதிவாளராக வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படம் அவருக்குக் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற விருதை பெற்றுத்தந்தது.
பின்னர் பல மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பாலு மகேந்திராவுக்கு, கன்னடப் படமான "கோகிலா"வின் மூலம் தேசிய விருதும் கிடைத்தது.

தமிழ்த் திரையுலகுக்கும் ஜே.மகேந்திரனின் "முள்ளும் மலரும்" படம் மூலம் அறிமுகமாகிய பாலு மகேந்திரா, 1979ல், தனது இயக்கத்தில் " அழியாத கோலங்கள்" படத்தைத் தந்தார்.

பின்னர் தெலுங்கு திரைப்படங்களிலும் பணியாற்றிய பாலு மகேந்திரா, தமிழ்த் திரையுலகில், 'மூடுபனி', 'மூன்றாம் பிறை' ' நீங்கள் கேட்டவை', 'ரெட்டைவால் குருவி', 'வீடு' ' மறுபடியும்' , 'சதி லீலாவதி' போன்ற படங்களைத் தந்தார்.
அவரது படமான 'மூன்றாம் பிறை' சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் அவருக்குப் பெற்றுத்தந்தது. மேலும் அந்தப் படம் ஹிந்தியிலும் 'சத்மா' என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

கலைப்படங்களை நோக்கிய நேர்த்தியான படங்களை உருவாக்குபவர் என்று பெயர் பெற்றிருந்த பாலு மகேந்திராவின் பெரும்பாலான படங்கள் வணிக ரீதியிலான முயற்சியே என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அவரது திரைப்படமான 'வீடு', அவருக்கு சிறந்த தமிழ்ப் படம் என்ற தேசிய விருதைப் பெற்றுத்தந்தது.

கடைசிப் படம்

'தலைமுறைகள்' என்ற சமீபத்தில் வெளியாகி விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இவரது திரைப்படம் தான் இவருடைய கடைசி திரைப்படம் ஆகும்.

இவரது மறைவிற்கு பல திரையுலக நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரசிகர்களும் திரை நட்சத்திரங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது திரைப்பட பள்ளிக்கூடமான ‘சினிமா பட்டறை’க்கு அவரது உடல் எடுத்து செல்லப்படுகின்றது.

Wednesday, February 12, 2014

Auction for 3G Spectrum (2100 Mhz) After New Government Takes Charge : TRAI

India’s telecom regulator TRAI today said that the next 3G spectrum in 2100 Mhz band be auctioned by June 2014 and should be made available immediately after the new government takes charge.

TRAI Chairman Rahul Khullar said “you should be planning now what you are going to do in next 3-4 years from now. One is get 2100 Mhz out by June, 2014 and the moment the new government takes charge, auction it”
Mr Khullar also said that aggressive bidding in the ongoing GSM spectrum (900Mhz and 1800Mhz band) auction may be because of the reason that mobile service providers are not sure when will they have next set of spectrum available for commercial use.
The last Auction of Spectrum in 2100Mhz band for 3G service was happened in May, 2010

 

Tuesday, February 11, 2014

பிப்ரவரி 11: தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள்

பிப்ரவரி 11: ஒளி விளக்கு, திரைப் படக்கருவி போன்ற பல கருவிகளை உருவாக்கிய தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள் இன்று..
தாமஸ் ஆல்வா எடிசன் இளம் வயதில் பள்ளிக்கு வெகு சில நாட்களே போனார். ஒரு நாள் வகுப்பை விட்டு வரும் பொழுது அவரின் பாக்கெட்டில் ஒரு துண்டு சீட்டு இணைக்கப்பட்டு இருந்தது. அதை அவரின் அன்னை எடுத்து பார்த்தார். கண்களில் நீர் முட்டிக்கொண்டது. "டாமி படிக்க லாயக்கில்லை ! வீட்டிலேயே வைத்துக்கொள்ளவும் !" என்று அந்த கடிதம் சொன்னது.

வீட்டில் அன்னையே எடிசனுக்கு ஆசிரியை ஆனார். டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டு பள்ளியில் படிக்க லாயக்கில்லை என துரத்தப்பட்ட எடிசன் அன்னையின் அரவணைப்பில் கல்வி கற்றார்.

உள்நாட்டு போர் நடந்த பொழுது சுடசுட செய்திகளை தொடர்வண்டியிலேயே அச்சிட்டு விற்றார் .ரயிலில் ஆய்வு செய்து கொண்டிருந்த பொழுது ஒரு பெட்டியில் தீ பற்றிக்கொண்டதற்காக ரயில்வே மாஸ்டரிடம் அறை வாங்கி ஒரு
பக்கம் கேட்கும் திறனை இழந்த எடிசன் தன் ஓயாத உழைப்பால் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்.

ஊமைப்படங்களை பேச வைக்கும் போனோக்ராஃபை ஆய்வகம் தீப்பிடித்து எரிந்த ஒரு வாரத்தில் உருவாக்கி காட்டினார். குண்டு பல்பின் இழைக்காக மலேசியா வரை ஆளை அனுப்பி பொருட்களை தேடிப்பார்த்தார். பத்தாயிரம் முறை தேடியும்
பொருள் சிக்கவில்லை ,"நான் பத்தாயிரம் முறை தோல்வியடைந்தேன் என சொல்ல மாட்டேன் ;பத்தாயிரம் பொருட்களில் இருந்து பல்பை ஒளிர வைக்க முடியாது !என கற்றுக்கொண்டேன் என்றார்.எடிசன் இறுதியாக பல்பை டங்ஸ்டனை கொண்டு ஒளிர வைத்தார் .

அதை சாதித்த பொழுது நள்ளிரவு .மனைவியிடம் ஆர்வமாக காண்பித்த பொழுது ,"நடுராத்திரியில் தூக்கத்தை கெடுத்துக்கிட்டு ;கண்ணு கூசுது விளக்கை அணையுங்க !" என்றார் .அவர் எப்படி மற்ற கண்டுபிடிப்பாளர்களில் இருந்து தனித்து நிற்கிறார் என்றால் தான் கண்டுபிடித்ததை வெற்றிகரமாக அவர் சந்தைப்படுத்தினார்.

காய்கறி விற்பனை,செய்தித்தாள் விற்றல் ,பள்ளியை விட்டு மூன்றே மாதத்தில் வெளியேற்றம் என விரக்தியான வாழ்வில் 1,093 காப்புரிமைகளை பெற்று இருந்தார் என்பதற்கு பின் எத்தகு உழைப்பு இருக்கும் என உணர வேண்டும் . வாழ்க்கையில் வலிகள் மிகுந்திருந்த பொழுது ஓயாத உழைப்பை கொட்டிய அவர் வெற்றியை ஓயாத உழைப்பே தீர்மானிக்கிறது என அடித்து சொன்னவர் .

ஒன்றுக்கும் உதவாத எடிசன் எனப்பட்டவர் மறைந்தார்;அமெரிக்காவில் விளக்குகள் சிலநிமிடம் அணைந்தன .ரேடியோ கரகரத்தது,"எடிசன் வருவதற்கு முன் உலகம் இப்படித்தான் இருந்தது !" மீண்டும் விளக்குகள் ஒளிர்ந்து ஊரே மின்னியது ரேடியோ சன்னமாக சொன்னது ,"எடிசன் பிறந்ததற்கு பின் உலகம் இப்படித்தான் இருந்தது !".அவரின் அம்மா எனும் ஆசிரியரால் வார்க்கப்பட்ட அந்த வெளிச்ச நாயகன் போராட்ட இருட்டில் மூழ்கி இருக்கும் எல்லாருக்கும் தன்னம்பிக்கை

Tuesday, January 21, 2014


ஜனவரி - 21தோழர்.லெனின் நினைவு நாள்

 கொடுஞ்சுரண்டலுக்கு ஆட்பட்டு வறுமையிலும், அறியாமையிலும் உழண்டு கொண்டிருந்த பாட்டாளி வர்க்கத்திற்கு கலங்கரை விளக்கமாக மார்க்சிய தத்துவத்தை வழங்கியவர் காரல் மார்க்ஸ் என்றால் அதை செயல்முறை ரீதியாக நடைமுறைப்படுத்தி காட்டியவர் தோழர்.லெனின் ஆவர். இளம் வயதிலையே அன்பு தந்தையை பறி கொடுத்து , மார்க்சியத்தை அறிமுகம் செய்து அறிவு கண்ணை திறந்த அண்ணன் அலெக்சாண்டரை ஜார் மன்னனின் கொடுங்கோன்மைக்கு பறி கொடுத்த போதும் மார்க்சியம் அவருக்கு வழிகாட்டியது. இதற்கிடையே வழக்கறிஞராக தேர்ச்சி பெற்றார் லெனின் .
மார்க்சியத்தை நன்கு கற்று தேர்ந்த லெனின் தொழிலாளர்களை சந்தித்தார்,அவர்களின் அவல நிலைக்கு காரணங்களை விளக்கினார், ரகசிய கூட்டங்களை நடத்தினார். இதனால் கோபம் கொண்ட ஜார் அரசாங்கம் லெனினை சைபிரீயவிற்கு நாடு கடத்தியது. சைபிரீயாவில் இருந்து விடுதலையானவுடன் ஜெர்மன் சென்று ‘இஸ்கரா’ என்ற பத்திரிக்கையை துவங்கினார். இந்த பத்திரிக்கையை நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் கொண்டு சென்றனர். ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தபடி லெனின் அனைவருக்கும் வழிகாட்டினர். 1905 ஆண்டில் ஜார் அரசின் அடக்குமுறையை பொறுத்து கொள்ள முடியாத தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தங்களின் வறுமை நிலையை ஜார் மன்னனிடம் சொல்வதற்கு மகஜர் ஒன்றை தயாரித்து அதை கொடுப்பதற்கு ஊர்வலமாக சென்றனர். ஆனால் கொடுங்கோலன் ஜார் அந்த தொழிலாளர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டான். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனால் நாடு முழுவதும் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். ஆனாலும் அந்த கிளர்ச்சியை ஜார் மன்னன் கொடூரமாக ஒடுக்கினான்.
ஆனாலும் மனம் தளராமல் லெனின் வலிமையான போல்ஸ்விக் கட்சியை உருவாக்கினார். 1914 இல் ரஷிய மன்னன் ஜார் நாடு பிடிக்கும் ஆசையில் முதல் உலக போரில் குதித்தான். இந்த கொள்ளைகார ஏகாதிபத்திய போரினால் உழைக்கும் மக்களுக்கு நன்மை எதுவும் இல்லை, தொழிலாளர்கள் தங்களை சுரண்டி கொளுத்து கொண்டிருக்கிற முதலாளிகளுக்கு எதிராக அவர்களுக்கு தலைமை தாங்க கூடிய அரசுக்கு எதிராக போரிட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். 1917ல் பிப்ரவரி புரட்சி வெடித்தது ஜார் வீழ்த்தப்பட்டான். இருந்த போதும் முதலாளிகள் ஆட்சியை கைப்பற்றி கொண்டனர். பாரளமன்றத்தை அமைத்து அதை சந்தை மடமாக நடத்தி கொண்டு இருந்தனர். மக்கள் அதே வறுமையோடு வாழ்ந்து கொண்டுருந்தனர்.
லெனின் தொழிலாளர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். நவம்பர் 7 ல் பெத்ரோகிராடு வீதிகளில் தொழிலாளர்கள் ஆயுதங்களுடன் அணிவகுக்க துவங்கினர். அரசு அலுவலங்கள் , காவல் நிலையங்கள், வானொலி நிலையம் முதலியவை கைப்பற்றபட்டன. அரசின் தலைமையகமான கிரெம்ளின் மாளிகை இறுதியில் விழ்ந்தது . முதலாளிகள் ஊரை விட்டு ஓட்டமெடுத்தனர். முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது .ரசியா சோஷலிச நாடு என்று அறிவிக்கப்பட்டது, லெனின் அந்த நாட்டின் மாபெரும் தலைவரானார்.
சோஷலிச ரசியாவை பல நாடுகளும் ஓன்று சேர்ந்து நசுக்க வேண்டும் என்று படையெடுத்து வந்தன. அவை அனைத்தும் லெனினால் தலைமை தாங்கப்பட்ட சோவியத் ரஷ்யாவின் செம்படையால் தோற்கடிக்கப்பட்டது. ஜார் மன்னனால் பிடித்து வைக்கப்படிருந்த நாடுகளை விடுதலை செய்தார் லெனின். ஆனால் அந்த நாடுகள் சுரண்டலற்ற சோவியத் கூட்டமைப்பில் அங்கமாக விருப்பம் தெரிவித்த்தன. அங்கும் செங்கொடி பறந்தது. மார்க்ஸின் கனவுகளை அவரின் தலைமை மாணவரான லெனின் நனவாக்கினார். வலிமையான பாட்டாளிவர்க்க அரசை அவர் நிறுவினார். 1924 ம் ஆண்டு ஜனவரி 21 நாள் அன்று மரணத்தை தழுவினார். அன்று உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் தலைவனை பறிகொடுத்த சோகத்தில் மூழ்கினர்.
லெனின் உருவாக்கி வளர்த்த மார்க்சிய -லெனினச கோட்பாடுகள் நமக்கு இன்றும், என்றும் வழிகாட்டியாக திகழும் என்பது உறுதி. மாபெரும் தலைவர் தோழர் லெனினை நினைவு கூறுவோம்.







 

Monday, January 20, 2014

குன்னுர் - குடந்தை, குடந்தை- குன்னுர்

நீலகிரி மாவட்ட சங்க அலுவலக திறப்பு விழா




நீலகிரி மாவட்ட சங்க அலுவலக திறப்புவிழா மற்றும் சேவைக் கருத்தரங்க சிறப்புக்கூட்டம்16-01-2014 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட தலைவர் தோழர்.ரங்கன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக நமது சம்மேளன கொடியை தோழர். ஜெயராமன் அவர்கள் ஏற்றிவைத்தார். சங்க அலுவலகத்தை நீலகிரி மாவட்ட துணை பொதுமேலாளர் திருமதி. சந்திரிகா அவர்கள்  திறந்து வைத்தார். தலைவர்களின் படத்தை தோழர்கள். மோகன்தாஸ், சுந்தரமூர்த்தி அவர்கள் திறந்துவைத்தனர். சேவை கருத்தரங்க சிறப்பு கூட்டம் காலை 11.00 மணிக்கு மாவட்ட பொருளர்  தோழர்.ஜேவியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உதவி மாவட்ட செயலர் தோழர்.ஜெயபால்அவர்கள் அனைவரையும்  வரவேற்று பேசினார். மாநில உதவி செயலர் தோழர். ராபர்ட்ஸ் துவக்கவுரை ஆற்றினார். 

 

இவ்விழாவில்  துணை பொது மேலாளர்  திருமதி.சந்திரிகா அவர்கள், உதகை கோட்ட  பொறியாளர்  திரு. இந்திர தேவன் அவர்கள், தோழமை சங்க தோழர்கள்.சுரேந்திரன் (BSNLEU), கணேஷ் (SNEA),  வெங்கடசலபதி குரு  (AIBSNLEA), மாதவன் (AITUC), விஸ்வநாதன் (AIBSNLPWA), கென்னடி (TNTCWU) ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினர். மாவட்ட செயலர் தோழர் ராமசாமி, குன்னூர் உதவி பொது மேலாளர் திரு. முத்தியால் ஆகியோர்  சேவை கருத்தரங்க உரையாற்றினர். 

சேலம் மாவட்ட செயலர் தோழர்.பாலகுமார்   மற்றும் மாநில இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் தோழர் குடந்தை விஜய்  ஆரோக்கியராஜ் ஆகியோர் சிறப்புரையுடன் மாவட்ட பொருளர் தோழர்.ஜெயராஜ் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். 

விழாவில் தோழமை சங்க தலைவர்கள்,   மாவட்ட சங்க கிளை சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணி  தோழர்கள் என 150 க்கும் மேற்பட்ட  தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.


Friday, January 17, 2014

IDA உத்தரவு  வெளியிடு
01/01/2014 முதல் 5 சத IDA உயர்விற்கான BSNL உத்திரவு 16/01/2014 அன்று  வெளியிடப்பட்டுள்ளது.
உத்திரவு காண இங்கே சொடுக்கவும்
 

Monday, January 13, 2014

தோழர்கள் மற்றும் தோழியர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

Sunday, January 12, 2014


சனவரி 12 தேசிய இளைஞர் தினம் 
சுவாமி விவேகாநந்தர் 151 வது பிறந்த தினம்

இறைவனை நிதீபதியாகவோ , தண்டிப்பவராகவோ,  பணியவேண்டிய ஒருவராக 
வழிபடும் முறைகள் தாழ்ந்தவை.அவை வரவர விரிந்து உயர்ந்த முறைகளாகலாம், எனினும் அவை அன்பு என்னும் பெயருக்கு தகுதி வாய்ந்தவையல்ல.

                                    சுவாமி விவேகாநந்தர்
 

Friday, January 10, 2014

தில்லியில் (டெல்லி ) லஞ்ச புகாருக்கான ஹெல்ப் லைன்  7 மணி நேரத்தில் 4 ஆயிரம் அழைப்புகள். ஊழல் தொடர்பான புகார்களுக்கு 011-27357169


BSNL, MTNL to get Rs 11,258 crore on spectrum surrender

9/01/2014 அன்று கூடிய மத்திய அமைச்சரவை BSNL மற்றும் MTNL நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட அலைக்கற்றை கட்டணத்தை திருப்பித்தர ஒப்புதல் அளித்துள்ளது.

BSNL உரிமம் பெற்ற 6 மாநிலங்களிலும், MTNL உரிமம் பெற்ற பகுதிகளிலும் BWA அலைக்கற்றை சேவை திருப்பி ஒப்படைக்கப்படும்.

BSNLக்கு 6724.21 கோடியும் MTNLக்கு 4533.91  கோடியும் 
திருப்புத்தொகையாக (REFUND) கிடைக்கும்.
BSNL, MTNL வளர்ச்சிக்கு இத்தொகை பயன்படுத்தப்படும்.

Thursday, January 9, 2014

01.04.2014 முதல் 5 சத IDA உயர்விற்கான DPE உத்திரவு 07.01.2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது உத்தரவு காண இங்கே சொடுக்கவும் BSNL  உத்தரவு விரைவில் வெளிவரும்
 GOM on revival of BSNL, MTNL meets 

BSNL மற்றும் MTNL நிறுவனங்களை சீரமைப்பதற்காக அமைக்கப்பட்ட  நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள் தலைமையிலான அமைச்சர் குழு  08/01/2014 அன்று கூடியது.
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.


ஒரு லட்சம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு (VRS) அளிப்பது.. 
அகன்ற அலைவரிசை சேவையை மேம்படுத்துவது.. 
கம்பி இல்லா அகன்ற அலைவரிசை இணைப்பு கொடுப்பது.. 
BSNLன் செல் கோபுரங்களை பிரித்து தனியாக புதிய நிறுவனம் ஆரம்பிப்பது..
BSNL மற்றும் MTNL செலுத்திய 10ஆயிரம் கோடி  அலைக்கற்றை கட்டணத்தை திருப்பித்தருவது ..  
BSNLக்கு வழங்கப்பட்ட தேசியக்கடன் தொகையை தள்ளுபடி செய்வது..
போன்ற பிரச்சினைகள் DOTயால் முன்வைக்கப்பட்டன. 
ஆயினும் முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Wednesday, January 8, 2014

Wednesday, January 1, 2014

ஜனவரி 2014  IDA உயர்வு.
01-01-2014 முதல் IDA 5% சதவீதம் உயர்ந்துள்ளது.
மொத்தம் IDA (85.5% + 5%) 90.5% சதவீதமாக
இருக்கும்.